கண்ணீரில் கரையுதடி என் காதல் 555

பெண்ணே...

எனக்குள் காதல் கனவினை
விதைத்தவள் நீ...

என் இரவின்
கனவை மறைத்தவள் நீ...

என் அழுகையை ஏணி பிடித்து
எட்டி பார்த்தவள் நீ...

என் உணர்வுகளை எல்லாம்
உசுப்பி விட்டவள் நீ...

என் நினைவுகளை வலிக்க
வைத்தவள் நீ...

இன்பமான என் வாழ்க்கைக்குள்
புயலை ஊதிவிட்டவள் நீ...

என்னை
நடைபிணமாக்கியவளும் நீ...

ஏமாற்றம் கொடுப்பதில்
இலக்கியம் படித்தவளா நீ...

ஏனடி காதலெனும் கவிதை தந்து
கண்ணீரில் கரையவைத்தாய்...

முடிந்தால் என்
எதிரே வந்துவிடு...

இல்லையேல் என் மரண
தேதியும் சொல்லிவிடு நீயே.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (4-Jul-17, 8:40 pm)
பார்வை : 893

மேலே