இமைத்திரையில் அவள் புன்னகைகள்

மெதுவாய் நகரும்
நொடியே நொடியே
என்
மின்னல் பூவை
கண்ணில் பார்த்தாயா ?

காற்றில் அசையும்
தளிரின் செவியே
என்
காதல் யாழின்
குரலைக் கேட்டாயா ?

மனவெளியில்
அவள் கனவலைகள்
விழித்திரையில்
அவள் புன்னகைகள்

உயிரைப் பிழியும்
உணர்வின் ரணங்கள்
நினைவை எரிக்கும்
பிரிவின் கணங்கள்
தொலைவாக இருந்தாலும்
துடிக்கும் இதயங்கள்

மெதுவாய் நகரும்
நொடியே நொடியே
என்
மின்னல் பூவை
கண்ணில் பார்த்தாயா ?

எழுதியவர் : Mathibalan (12-Jul-17, 6:59 am)
சேர்த்தது : மதிபாலன்
பார்வை : 77

மேலே