உன்னோடு நானிருந்த ஒவ்வொரு மணித்துளியும்
உன்னோடு நானிருந்த ஒவ்வொரு மணித்துளியும்....
******** *********** ************* *************
விதிகளெல்லாம் ஒன்று -
கூடித்தோற்கடிக்கும் போது
வீழ்ந்து விட்டாயடி
விதையாய் என்னுள்ளே...
மறப்பேனா என் மார்பில் நீ சாய்ந்து
விட்ட கண்ணீரை....
காற்றாக நீ என்னுள்
கருவாகிக்கிடக்க -
காலத்தை வென்றாயினும்
காப்பேனடி உன் உயிரை,,,,
மகரந்த மொட்டாக
மலர்ந்து கிடக்கின்றாய்
மதி கலங்கி உன் மடி மீது நான்
வீழ்ந்து விட,,,,
ஏற்பாயா எனை
எத்தனை ஜென்மமெனினும்
காத்திருப்பேன் உனை,,,