விவசாயிகளின் அவலம்

அ-அரிசியெனும் அற்புதத்தை

ஆ-ஆன்மாவிலிருந்து பிரித்தெடுத்து

இ-இன்பம் மலர்ந்த முகத்தோடு

ஈ-ஈன்ற தாய் அந்த விவசாயி

உ-உயிர்க்கு உணவாக உலகிற்கு

ஊ-ஊட்டிய அவன் கரங்களை

எ-எச்சம் என்று நாம் உதைத்திட

ஏ-ஏழை என்ற காரணம்தான்

ஐ-ஐவிரல் தேய்ந்த அவன் கரங்களும்

ஒ-ஒன்று கூடி நின்றுவிட்டால்

ஓ-ஓங்கிய உன் கால்களுக்கு

ஔ-ஔடதம் காண வழியிறாது

எழுதியவர் : தரணி ஜெயராமன் (27-Aug-17, 10:26 am)
பார்வை : 190

மேலே