கடவுள் செய்யும் கொலை

கோடி விந்தில் பிழைத்துஓடி வந்த
ஒருவிந்து முட்டி கரு சேர்ந்து உருவாகி
காத்திருந்து கால் பதியும் புவி மேலே, ஒன்றறியா மண்போலே.

பிடித்துப் பிள்ளையாராய்,புத்தனாய்,அல்லாவாய்,
கிருத்துவாய் இன்னும் பிறவாய் மாற்றிக் கொல்லக் காத்திருக்கும் கூட்டமொன்று.

மதத்தின் பெயரில் உயிரைப் பறித்து
பிணத்தின் மீது கடவுள் வளர்க்கும் கயவர் கூட்டம்.

இருள்காட்டில் பயத்தில் பாதுகாக்க நா உலறும் பிம்பம்அது கடவுள்,

காக்க கொண்ட வேலை விடுத்து நமையே கொல்வான்ஆகின்
அவன் தலைஎடுத்து அங்கே அன்பு பொறுத்துங்கள்.

மதம்எல்லாம் கூறியது அன்பொன்றே.
எவர் ஒருவரை வெறுக்காத தூய அன்பு.

அன்பு கொடுத்து அன்பு வாங்க அகிலம் வாழும்.

இல்லையேல் துன்பமே நாளும்.

எழுதியவர் : சிவக்குமார்-"கரிசல்மகன்" (3-Sep-17, 10:13 pm)
சேர்த்தது : சிவக்குமார்
பார்வை : 174

மேலே