காதலும் காலமும் நானும்

உனக்கென நான் எழுதும் ஒவ்வொரு எழுத்துக்களும்
உன்னை சேராமல் துடி துடித்து சாகும் போது
நான் பெரும் வலி மரணத்தை விட கொடியது

உன் மௌனம் எனும் மொழி தெரியாத அறிவிழி நான்
உண்மை நீ அறிதும் மௌனம் மட்டும் என்னிடம்
பேசும் நியாயம் புரியவில்லை எனக்கு

உன்னை நான் முழுவதும் அறிந்தும்
உன்னுள் நானும் என்னை அறியேன்
பதில் இல்லா என் கேள்வியாட நீ

காற்றில் கைகளை நீட்டியே காத்திருந்தேன்
என்றாவது கரம் தீண்டுவாய் என்று
கைகளும் நோக காத்திருந்தது தான் மிட்சம்

கடந்து சென்று விட்டாயா என்று அறியாமல்
கடந்து செல்லவும் முடியாமல்
உன்னுடனும் இல்லாமல்...
உன் பின்னே செல்லும் என் மனம்..

ஓயாமல் எங்கும் கேட்க்கும் உன் பெயர்..
ஒரு நிமிட உறக்கத்திலும் வரும் உன் கனா..
அசைவில்லாமல் நான் நிற்கும் போது
என்னுள் அசைந்தாடும் உன் நியாபகம்...

காலங்கள் உருண்டு ஓடும் பொழுது
ஓரமாய் நான் மட்டும் காத்திருந்தேன்
நீயும் ஒரு ஓரத்தில் எனக்கென காத்திருப்பாய் என்று..
ஓடி செல்லும் காலம் என்னை உருட்டி செல்கிறது..
கண்டெடுப்பாய் என கண்மூடி தனமாய் நான் வாழ்ந்த..
ஓடிய ஒவொரு நொடியும் என்னை பார்த்து இகழ்ந்து சிரிக்கிறது....

எழுதியவர் : நான் (25-Sep-17, 3:40 pm)
சேர்த்தது : Kavitha
பார்வை : 221

மேலே