பறவையின் மனசு

ஆற்றிலோர் கால்
சேற்றிலோர் காலென்பின்
பாசத்தில் பஞ்சம் சூழும்
உண்ணவும் பஞ்சம் நேரும்
எதுவுமே முழுமை பெறாது

சிறகடித்திடும் வானத்தில்
பறவையின் மனசிருக்கும்
கூட்டில் குஞ்சுகள் பால்
இழப்புகள் நிகழாதிருக்க
மூச்சு க்கு மூச்சு தாயோ
கூடுள்ள வட்டாரத்தில்
வட்டமிட்டுச் செல்லும்

"பறவையின் மனசு" போல்
மானிடர்க்குமக்தே நிகழ
பணியில் உடலிருக்கும்
மனையிலே மனதிருக்கும்
மணியில் விழியிருக்கும்
தனிமையில் விட்டுவந்த
உறவுகளில் உறவாடிடவே

மனையிலே உள்ளோர்க்கு
வழி மேலே விழியிருக்கும்
பதற்றத்தில் மனதிருக்கும்
போனவர் வீடு திரும்பவும்
வரும்வரை காத்திருக்கும்
இருகண்கள் பூத்திருக்கும்
நிழல் தரும் உறவின்மேல்
இரத்த பந்தத்தினருக்கு
•••••••
ஆபிரகாம் வேளாங்கண்ணி
மும்பை

நன்றி
தினமணி கவிதைமணியில் எமது கவிதை 25.09.2017
" பறவையின் மனசு "

எழுதியவர் : ஆபிரகாம் வேளாங்கண்ணி (25-Sep-17, 8:08 pm)
Tanglish : paravaiyin manasu
பார்வை : 173

மேலே