ஜனனம்

''கருவுற்ற நாள் முதலாய்
கனவுகளோடு சுமந்து
கைகளில் முத்தாய் உனை எடுக்க
காற்றில் பறந்து விடும்- உன்
ஜனனத்திற்காய் அவள் அடைந்த வலி...

பிரம்மிப்பாய் தன் பிம்பம்
பிஞ்சுக் கைகளில் தனைத் தீண்டும் போதே
தன் கற்பனைகளுக்கு
நன்நம்பிக்கை சிறகு கட்டிவிடும் தந்தை...

ஆக.....
இரு உள்ளங்களின்
இமய அளவு எதிர்பார்ப்புகளில்
இதோ உந்தன் ''ஜனனம்'' -யாத்வி

எழுதியவர் : யாத்வி (30-Sep-17, 12:28 pm)
Tanglish : jananam
பார்வை : 1379

மேலே