அவள் நினைவுகள்
விலகிப்போகும் நொடியில்
விஷமாய்விட்ட
பிரிவின் துகள்கள்
விதையாய் மனதில்;
விதியின் மொழிகள்
வலியின் மருந்தாய் ;
விரல்கள் கோர்த்த தருணம்
விளைந்த வடுக்களாய் ;
அறுக்க அறுக்க
முளைக்கும் முகம் ;
என்னைத்தொலைத்த தேடலில்
எஞ்சிய மிச்சம்
அவள் நினைவுகள்.............