ஏனிந்த மாற்றம்

உன் பெயரை
என் இதழ்கள் உச்சரித்த
மறு நொடி .......
என் விழிகளுக்குள்
ஓர் பரவசம் ......
என் இமைகளோ
உன் வசம் .....
உள்ளத்தில்
உன் வாசம் ......
உயிரினில்
உன் சுவாசம் ........
உதடுகளின் உளறல் .......
உன்னில் என் தேடல் ......
ஏனிந்த மாற்றம்
எனக்குள் ???
உனக்குள் தொலைந்த
மனதிற்குள்
தொற்றிக்கொண்டு வாழும்
தொற்றுண்ணி இனி நான்
உனக்கு !!!!