பொங்கலும் காதலும்

தைமகள் திருநாளில்
தாவணி உடையழகில்
தரிசனம் தந்த தமிழச்சியே...

நீ பொங்கல் வைக்கும் அழகினில்
பொங்குதடி என் ஆசை..!
தங்கம் நீயும் சம்மதித்தால்
என் தரிசு மனம் விளையுமடி..!

காளையாய் நானிருக்க
கரும்பாய் நீயிருக்க
மாலையை மாத்திடலாம்
இந்த மச்சானை ஏத்துக்கடி..!

மாசியில் மணமுடித்து
மார்கழியில் குழந்தை பெத்து
அடுத்த பொங்கலுக்குள்
அப்பா அம்மா ஆகிடலாம்..!

எழுதியவர் : ந.இராஜ்குமார் (14-Jan-18, 1:54 pm)
சேர்த்தது : இராஜ்குமார்
பார்வை : 6479

மேலே