அவளின் காலை
வைகறை துயில் எழ
கடிகாரம் கண்டு மனம் கசக்க
சரமாரியாக பிறர் உண்ண அவள் சமைக்க
வீதியில் உள்ள மலரும் காகமும் அவளை பார்த்து நகைக்க !
வியர்வையில் உடல் நனைக்க!
விறுவிறு என்று தெருக்கோடி அவள் அடைய
பேருந்து பறந்தது என அங்குள்ள பெரியவர் சொல்ல
ஒரு நாள் கூலி போய்விடுமே !
என்று அவள் மனமோ இழுத்தடிக்க
எப்படியாவது செல்ல வேண்டும் என்று அவள் நினைக்க
செய்தி வந்தது அலுவலகம் இன்று விடுமுறை என்று
அவள் மனம் இனிக்க !