விடைகொடு நண்பா விட்டுச்செல்கிறேன் ...

விடைகொடு நண்பா விட்டுச்செல்கிறேன் ...
நட்பின் நினைவுகள் மட்டும் ஏந்திச்செல்கிறேன்...
தடைகளை தாண்ட தோள் கொடுத்தாய்...
என் தாயின் இடத்தில் நீ இருந்தாய் ...

காலங்களோடு கரையாதே ...என்றும்
நட்பின் நினைவலைகள் அழியாதே !!!
அழகைத்தான் பார்த்து மயங்காதே ..நம்
நட்பு தெளிந்த ஒரு நீரோடை !!!

விடைகொடு நண்பா விட்டுச்செல்கிறேன் ...
நட்பின் நினைவுகள் மட்டும் ஏந்திச்செல்கிறேன்...
கண்ணீரை துடைத்து கரம் கொடுத்தாய் ...
என் கடவுள் கொடுத்த பொக்கிஷம் நீ...

இந்த வானம் பூமி சாட்சியடா ...நட்பைவிட
உயர்ந்த்த உறவு இல்லையாட !!!
இந்த காலம் மீண்டும் வாராதே ...உன்னை
போலே தோழன் வேறெங்கே !!!

விடைகொடு நண்பா விட்டுச்செல்கிறேன் ...
நட்பின் நினைவுகள் மட்டும் ஏந்திச்செல்கிறேன்...
சந்தோஷ தருணங்கள் நீ கொடுத்தாய் ...
நன்றி சொல்வேன் கண்ணீர்துளியில் ...


சண்டைகள் கூட சாரலட ...நம்
தோழமைக்கு அது உரமாகும் !!!
மின்னல்கள் நம்மை படமெடுக்கும் ...நம்
நட்புக்கூட்டுகுள்ளே இடம்கேட்கும் !!!

விடைகொடு நண்பா விட்டுசெல்கிறேன் ...
நட்பின் நினைவுகள் மட்டும் ஏந்தி செல்கிறேன்...
கல்லூரி கொடுத்த கலங்கரையே...
கல்லறையிலும் தொடரும் நம் நட்பு...

எழுதியவர் : amala (4-Aug-11, 11:52 pm)
பார்வை : 725

மேலே