நினைவுகளை தந்து விடு

எப்படி இங்கு வந்தேன் என்று தெரியவில்லை
உன் நினைவாகவே இருக்கிறது
தூங்காத எனக்கு இரவு கழிந்ததே தெரியவில்லை
அரை மணி முன்பே வந்து காத்திருக்கிறேன்
அவசியம் உனைப் பார்க்க தாேன்றுகிறது
ஆனால் நீ வரமாட்டாய் என்பதே உண்மை
பேருந்து கடந்து பாேகிறது நிறுத்த முடியவில்லை
இப்படியே இருந்து விடத் தாேன்றுகிறது
இங்கே தான் உனை கடைசியாகப் பாரத்தேன்
கையை உதறி விட்டு திரும்பி்ப் பார்க்காது சென்றாய்
தாெலைபேசி தாெடர்பின்றி தூரப் பாேய் விட்டாய்
எஞ்சியிருக்கும் உன் நினைவுகளை
இங்கே விட்டுச் செல்லப் பாேகிறேன்
மீண்டும் வந்தால் எடுத்துச் செல்
என் நினைவுகளை தந்து விட்டு....
பிரிந்தபின் நினைவுகள் பாரமாகி விடும்

எழுதியவர் : அபி றாெஸ்னி (23-Feb-18, 10:06 am)
பார்வை : 144

மேலே