எழுத மறந்த கவிதை

எழுத மறந்த கவிதை

எழுத மறந்த கவிதையொன்று
எட்டி பார்த்தது

அள்ளியெடுத்து
மழைநீரில் நனைத்து
மார்போடு அணைத்து கொண்டேன்

உயிரை ஊடுருவும் பார்வை
உள்ளம் தொடும் புன்னகை
காதல் தேன் கலந்தேன்

உவகை தரும் குறுஞ்செய்திகள்
ஊனை வருடிய சொற்கள்
இன்ப கற்கண்டு சேர்த்தேன்

அழகு பெண்பால்
ஆசை ஆண்பால்
இச்சை பாலும் கூட்டினேன்

மூன்றும்
கலந்து பருகி
கலந்து பருகி
காலம் கடந்து
ஆணவம் பெருக்கி
காதல் தொலைத்து

சுவையற்ற கவிதையொன்று
தனியாக தேங்கி நிற்கிறது

எழுதப்படாமலேயே இருந்திருக்கலாம்
அந்த கவிதை

எழுதியவர் : சூரியகாந்தி (25-Feb-18, 5:56 am)
பார்வை : 128

மேலே