வலி

பால்குடி மறவாப் பிள்ளைகளுக்கு

பால் ஊற்றி வழி அனுப்புகிறதோ

பாலாய் போன சமூகம்

நடிகையின் இறப்பை

நொடி தவறாது விமர்சித்த

ஊடகங்களின் கண்களில்

இக்கொடிய தாக்குதல்

சிக்காமல் போனது வியப்பிற்குரியது

கருவறை விட்டு பிரிந்து

ஓரிரு நாட்களிலேயே

கல்லறைக்குச் செல்லும்

வரம் வாங்கி வந்ததோ

இப் பிஞ்சு பிள்ளைகள்

குருதி ஓடையில்

குளிக்கும் சமூகம்

அதை வெளிகாட்ட மறுக்கும் ஊடகம்

இந்த சூழலில் தான்

நாம் வாழ்கிறோம் என்பதை

எண்ணும் போது

இதயத்தில் வேதனை எழுகிறது

இரு விழிகளில் கண்ணீர் வருகிறது

இறைவன் மீது கோபம் வருகிறது....

கல்லறைக்குள் சென்ற உடல்கள்

எங்கோ ஓர் கருவறையில்

பிறக்கும் என்ற நம்பிக்கையில்

வலியோடு எழுத்துக்களை

முடிக்கிறேன்....

எழுதியவர் : கிருத்திகா (26-Feb-18, 11:42 pm)
Tanglish : vali
பார்வை : 546

மேலே