இதயம் கவர்ந்தவள்

சீதையை கவர்ந்த இராவணனாய் என் இதயம் கவர்ந்து சென்றாய்
ராமன் தேடிய சீதையைப்போல்
என் மனதை தேடி வந்தேன்!

பறித்த முடியை திருப்பிக் கேட்ட
பாண்டவர்போல் உன்னிடம் தருமம் வேண்டி நின்றேன்
எடுத்த பொருளை கொடுக்க உனக்கு ஏனோ மனமில்லை!

நம்முள் போரும் மூண்டதடி
நமக்கது நாளும் நீண்டதடி
கனலியின் கணைகள் சுட்டெரிக்க காதல் கைதியாய்
கட்டுண்டேன்!

எனது கிறுக்கல்கள் ✍

எழுதியவர் : துலசிதரன் (16-Apr-18, 6:50 pm)
சேர்த்தது : துளசிதரன்
பார்வை : 541

மேலே