கம்பன் என்பார் பாரதி என்பார்

கம்பன் என்பார் பாரதி என்பார் கவிக்கொம்பன் என்பார்
தன் உள்ளத்தின் உனர்வுகளைச் சொல்லத் தெரியாதார் !
வானம் என்பார் முகில் என்பார் வண்ண நிலவு என்பார்
தன் உள்ளத்தில் ஒளிந்திருக்கும் நிலவைக் காணாதார் !
மலர் என்பார் மலர்த் தோட்டம் என்பார் மனம் வீசுதென்பார்
மனத்தென்றல் வீசும் தன் இதயத் தோட்டத்தை அடையாளம் காணாதார் !
என்ன மனிதர்கள் இவர்கள் இரவல் சிந்தனையில் இதயத்தைப் பறிகொடுத்தார் !!!

எழுதியவர் : கவின் சாரலன் (4-May-18, 5:13 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 68

மேலே