என் மகளே
உன் அழுகையின் சத்தம் கேட்டு
என் ஆணவ சத்தமெல்லாம் போனது என்னை விட்டு
என் அதிகாரம் எல்லாம் அணு அணுவாய் சிதைந்தது
உன் ஆசை குரலை கேட்டு
உன் புன்னகை
என் புண் பட்ட இதயத்திற்கு போட்டது ஒரு புதிய மருந்து
என் சுட்டு விரல்
உன் ஐந்து விரல்களுக்கு நடுவே சிக்கி கொண்ட பொழுது,
என் தந்தையை
நான் உணர்ந்தேன் அப்பொழுது
என் தாய் எனக்கு குழந்தை ஆனதும்
என் தாய்க்கு நான் தகப்பான் ஆனதும் உன்னாலே தான்.
அன்பு மகளே
அடிமையானேன் உனக்கு
என் அகங்காரம் எல்லாம் அடியோடு அழிந்தது
உன் அன்புக்கு.
ஆயுதங்கள் ஆயிரம் இருந்தும்
உன்னிடம் தோற்றேன் உன் சிறு புன்னகைக்கு.