வாதம், வம்பு பண்ணக் கூடாது

Dr.சாவித்ரி என்ற திரைப்படத்தில் உடுமலை நாராயண கவி இயற்றி,
கலைவாணர் N.S.கிருஷ்ணன் பாடும் ஒரு அருமையான பாடல்.

வாதம் வம்பு பண்ணக் கூடாது - பிடி
வாதம் வம்பு பண்ணக் கூடாது - பெண்கள்
வகையில்லாப் பொருளை வேண்டிப்
புருஷனிடம் எப்போதும் (வாதம்)

வரவு செலவு எண்ணிப் பாக்கோணும் - வீட்டு
வாழ்வின் தேவைகண்டு கேக்கோணும் - போலி
மரியாதை மதிப்புக்கான
அல்டாப்புகளை நீக்கோணும் (வாதம்)

அம்பது ரூபா சம்பளக்காரன் பொஞ்சாதி - தினம்
ஒம்பது தடவை காப்பி குடிப்பது அநீதி
எம்பது ரூபா புடவை கேட்டா
குடும்பத்துக்கே விரோதி (வாதம்)

வெள்ளிச் சரிகை வேஷ்டி சேலை கொடுத்து - எவர்சில்வர்
வெங்கலப் பாத்திரம் வாங்குவதைத் தடுத்து - புருஷன்
விலை மதிப்பை எடுத்துச் சொன்னா
முகத்தைச் சுளித்து (வாதம்)

போதும் என்ற அளவு கடந்து – தனக்குப்
பொருந்தும் பொருந்தாது என்பதை மறந்து – உண்மைக்
காதல் கொண்டான் தன்னைக்
கசக்கிப் பிழிந்து – வாதம் - பிடி
வாதம் வம்பு பண்ணக் கூடாது - பெண்கள்

யு ட்யூபில் கேட்கலாம்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (1-Jul-18, 4:00 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 248

சிறந்த கட்டுரைகள்

மேலே