பெண்மைத் தென்றலே

அனல் கொப்பளிக்கும்
மத்தியான வெயிலில்
அருகாமையில் வந்து
சுகமாய்ச் சுகந்தம் வீசியது
இந்தப் பெண்மைக் காற்று
உன்னைச் சிறை பிடிக்கும்
சூத்திரத்தை நீயே எனக்குக்
கற்றுக்கொடு தென்றலே
என் நெஞ்சாம் வீட்டில்
உனக்கு ஆசனமிட்டமர்த்த
நான் ஆயுள் முழுதும் சம்மதமே!

அஷ்றப் அலி

எழுதியவர் : alaali (11-Jul-18, 1:29 pm)
பார்வை : 301

மேலே