அப்பா

முதல் முதலாய் கவிதை ஒன்று எழுத நினைத்தேன் உனக்காக
வார்த்தைகள் தேடி அலைந்தேன் பேதையாக
சொற்கள் தான் சோடிக்கிட்டு மறைந்தது
சோகம் தான் கண்ணை மறைத்தது
பின்புதான் தெரிந்து கொண்டேன்
உன்னை விட அழகிய கவிதை இல்லை என்று
அதை படைத்தவள் அழகிய சிற்பி என்று
மூன்று எழுத்து கவிதை நீ
என்றும் என்னை சுமக்கும் என் அப்பா ...

எழுதியவர் : ஹேமாவதி (18-Jul-18, 9:58 pm)
சேர்த்தது : hemavathi
Tanglish : appa
பார்வை : 3536

மேலே