விழிப்பு
விழித்துக் கொள் மனிதா
மண் பானை நீரும்
மண் செட்டி சோறும்
மண் மணக்கும் நம்ம ஊரும்..
நினைவில் கொள்ளடா!
வாழையிலையில் பரிமாறி
வண்டி வண்டியாய் ஆவுக்கு
உணவு விடுவோம்.....
உணவையே மருந்தாக்கி
உடல் நலத்தை காத்திடுவோம்.....
கைவினைப் பொருள்களை பயன்படுத்தி பலர் குடும்பத்தை உயர்த்திடுவோம்.....
தேவையில்லாத பொருட்கள் நம் மண்ணை அழிக்காமல் பாதுகாப்போம்.......
நிலத்தடி நீரை காப்போம்
மக்கா பொருளை தவிர்த்திடுவோம் விழித்துக் கொள் மனிதா
உன் வாழ்க்கை உன் கையில்.......