விசித்திரமானவள்

சலனம் இல்லாமல்
என்னுள் சலனத்தை ஏற்படுத்தியவளே
கதைத்திட ஆயிரம் கதைகள் இருந்தாலும்
பேசாமல் மௌன மொழி பேசி
இன்பமான துன்பம் தரும் விசித்திரமானவள் நீ..!!!

தென்றலாய் உன் ஞாபகங்கள்
என்னை தழுவிடும்போதிலெல்லாம்
சிலையாய் மாறித்தான் போய் விடுகிறேன் நான்..!!!
என்னவளே...
உன்னுடைய சுவாசம் கொண்டு
என்னை உயிர் பெற செய்வாயா???

*

#DM

எழுதியவர் : தென்றல் தாரகை (27-Aug-18, 4:53 pm)
சேர்த்தது : தென்றல் தாரகை
பார்வை : 3431

மேலே