தென்றல் தாரகை - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  தென்றல் தாரகை
இடம்
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  16-Dec-2013
பார்த்தவர்கள்:  1319
புள்ளி:  246

என்னைப் பற்றி...

புரியாதோருக்கு அகந்தைமிகு திமிராய் - புயலாய் நான்

புரிந்துகொள்ள முற்படுவோருக்கு விசித்திரமானவளாய் - விந்தையான புதிராய் நான்

புரிந்துகொண்டோருக்கு வித்தியாசமான - ரசனைமிகு புதுக்கவிதையாய் நான்



ஒவ்வொருவர் பார்வைக்கும் ஒவ்வொரு விதமாய் நான்
நான் எனும் நான்
நான் மட்டுமே அறிந்த நான்

என் படைப்புகள்
தென்றல் தாரகை செய்திகள்
தீனா அளித்த படைப்பில் (public) dinakaran145bb5a869a0ec0 மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
10-Oct-2018 5:53 pm

காதல் அருந்தக் கேட்டேன் கானல் நீரை கையில் கொடுத்து பருகச் சொல்கிறாய்..

அழகிய காதல் தீவில் இருந்து கொண்டு என்னை வேள்வி தீயில் எரித்து விடுகிறாய்!!...

புன்னகை செய்யாமல் புருவம் தூக்கி கர்வம் கொள்கிறாய்....

உன் விழிகள் கொண்டு என் வழிகள் மாற்றிவிட்டாய் உன் வாய்மொழி தான் சொல்வாயோ!!....

மௌனம் வேண்டாம் பெண்ணே விழி அசைத்து விடு போதும் கண்ணே!!..

மேலும்

நன்றி தோழி... தாரகை 11-Oct-2018 12:59 pm
சூப்பர் 11-Oct-2018 11:23 am
நன்றி தோழி... 11-Oct-2018 9:59 am
நன்றி தோழர்... 11-Oct-2018 9:58 am
தென்றல் தாரகை - தென்றல் தாரகை அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Oct-2018 12:11 pm

சுற்றம் சூழ மாலை மாற்றி
மணமுடிக்காவிடினும்,,,
அவனே தன் மணாளனென வாழ்ந்த
பெண்ணொருத்தியின் மார்பில்
தவழவிருந்த பொட்டுத் தாலியொன்று
அவள் தன்னவனாக
நினைத்தவனின் கரங்களினால்
வேறொருவருக்கு அணிவிக்கப்பட்டால்.???

அவன் கட்டிய தாலியையும்
வைத்த குங்குமத்தையும்
அணிவித்த மெட்டியையும்
சுமக்கும் வரம் பெறாவிடினும்
இலேசில் எவருக்கும் கிட்டிடாத
அவனது காதலையும் வெறுப்பையும்
ஒருசேரப் பெற்றவளிவள்..!!

இதுபோதுமே,
அவளின் இனிவரும் நாட்களுக்கு..!!!!

மேலும்

புரிதலுக்கு நன்றி 11-Oct-2018 11:15 am
unmayana kadhalin ekamana unarvudan kudiya varigal... 10-Oct-2018 6:34 pm
தென்றல் தாரகை - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Oct-2018 12:11 pm

சுற்றம் சூழ மாலை மாற்றி
மணமுடிக்காவிடினும்,,,
அவனே தன் மணாளனென வாழ்ந்த
பெண்ணொருத்தியின் மார்பில்
தவழவிருந்த பொட்டுத் தாலியொன்று
அவள் தன்னவனாக
நினைத்தவனின் கரங்களினால்
வேறொருவருக்கு அணிவிக்கப்பட்டால்.???

அவன் கட்டிய தாலியையும்
வைத்த குங்குமத்தையும்
அணிவித்த மெட்டியையும்
சுமக்கும் வரம் பெறாவிடினும்
இலேசில் எவருக்கும் கிட்டிடாத
அவனது காதலையும் வெறுப்பையும்
ஒருசேரப் பெற்றவளிவள்..!!

இதுபோதுமே,
அவளின் இனிவரும் நாட்களுக்கு..!!!!

மேலும்

புரிதலுக்கு நன்றி 11-Oct-2018 11:15 am
unmayana kadhalin ekamana unarvudan kudiya varigal... 10-Oct-2018 6:34 pm
தென்றல் தாரகை - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Oct-2018 11:36 am

ஆயுள் முழுமைக்குமானவற்றை பேசித் தீர்த்தாயிற்று
ஆங்காங்கே சில கோபப் பார்வைகள்
அதனிடையே மென்மையாய் விரல்களின் இறுக்கம்
அவ்வப்போது ஓராயிரம் புன்னகைகள்
சிறு சிறு சீண்டல்களோடு
இனி மௌனமாய் ஒரு யுகம் போதும்..!!!!

மேலும்

தென்றல் தாரகை - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Oct-2018 11:22 am

இறப்பு ஏதும் நிகழ்ந்ததாய் தெரியவில்லை

மரணஓலம் கேட்டுக்கொண்டே இருக்கிறது

சன்னல் சாளரம் மூடப்பட்டு விட்டது

இனி,

அழுகுரல் எவர் செவியையும் எட்டாது

ஓலம் கேட்டு எவரும் ஓடி வரமாட்டர்

இடையூறு ஏதுமின்றி ஓலம் தொடரும். . . . .

மேலும்

தென்றல் தாரகை - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Oct-2018 12:47 pm

கேட்டது
கேட்டதும் கிடைக்காவிடினும்
கேட்டது
கேட்டதைவிடவும்
சிறப்பாய் கிடைக்கும் அவரிடம்..!!!


#My dr faathu

மேலும்

தென்றல் தாரகை - ப்ரியா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Mar-2015 4:13 pm

இல்லத்திற்கு இளையவளாய்
பரணியில் பிறந்து
தரணி ஆளும் தங்க தாரகையாய்

எந்தையும் தாயும்
அன்போடு அணைக்கும்
செல்ல மகளாய்

கற்றுக்கொடுத்த குருவுக்கு
நல்ல மாணவியாய்

கற்றுக்கொடுக்கும் மாணவர்களுக்கு
நல்ல குருவாய்

உற்றாரும் உறவினரும்
போற்றும் நன் மங்கையாய்

அலுவலகத்திலும் புகழோடு
பெருமை சேர்க்கும்
நல் நங்கையாய்

என்னை நேசிக்கும் ஜீவன்களை
நேசிக்கும் சிநேகிதியாய்

இயற்கையின் காதலியாய்
இன்றுவரை
வாழ்ந்துகொண்டிருக்கும் நான்

கடந்த பாதையில் நடந்த
சுகங்களை மனதில் ஏற்றி
சோகங்களை வெளியில் தூற்றி

என்னை உண்மையாய்
நேசிக்கும் உறவுகள் அனைவரின்
அன்பு மழையில் நனைந்

மேலும்

தங்கள் ஆசி எனக்கு எப்பொழுதும்....வாழ்த்தில் கருத்தில் மிக்க மகிழ்ச்சி ஐயா....!! 18-Feb-2016 12:44 pm
மிக்க மகிழ்ச்சி நண்பரே....!! 18-Feb-2016 12:44 pm
தங்கள் இனிமையான கருத்திலும் வாழ்த்திலும் மிக்க மகிழ்ச்சி ஐயா....!! 18-Feb-2016 12:43 pm
//கவிதை முழுவதும் மென்மையான உணர்வுகளோடு அழகாக உங்களை பற்றி சொன்ன விதம் எந்த ரசிகனையும் ரசிக்க வைக்கும் வண்ண மழையாகவே இருந்தது.....//....இதுவே அழகிய வாழ்த்து தங்கள் வரவிலும் கருத்திலும் மிக்க மகிழ்ச்சி நண்பரே...!! தாமதமான கருத்திற்கு மன்னிக்கவும்...... 18-Feb-2016 12:43 pm
தென்றல் தாரகை - பிரகாஷ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Dec-2015 10:31 am

அடி
பெண்ணே...

உன் வரவால்...

என் வாழ்க்கை...
புயலால்
ஏற்பட்ட
பருவ மழை
மாற்றமாய் மாறிவிட்டது...!

ஆனால் நீயோ
சற்றும் தாழ்வு
மனப்பான்மை
இன்றி வந்த
வேகத்தில்
என்னில் புகுந்து
என் இதயத்தை கிழித்து
கடந்து சென்றுவிட்டாய்...!

இடி விழுந்த என் காதல்...!

தேங்கிய மழை
நீராய் என் கண்கள்...!

நிவாரணமான நீ எங்கே....???

இவன்
பிரகாஷ்

மேலும்

ஹம், நன்றி.. 14-Dec-2015 10:34 am
காதலுக்கு கண்ணீர் தானே நிவாரணமாய் ...... வாழ்வில் புயல்கள் , பருவமழை எல்லாம் சகஜம் தானே ... வாழ்த்துக்கள் .... 14-Dec-2015 9:49 am
நன்றி. 13-Dec-2015 7:37 pm
அடடா ... அசத்தலான படைப்பு இன்னும் கலக்குங்கள் வாழ்த்துகள் தோழரே .. 13-Dec-2015 11:43 am
தென்றல் தாரகை - ஜெபகீர்த்தனா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Nov-2014 7:16 pm

*********திரும்பி !
உன்னை என்னவென்று கேட்டேன் ..
அன்று தெரியவில்லை நீதான் என்
என்னவன் என்று !

நீதான் என் என்னவன் என்று தெரிந்த பின்
உன்னை என்னவென்று கேட்கத் தோனவில்லை
இன்று உன்னவள் என்று ... *******

மேலும்

நீதான் என் என்னவன் என்று தெரிந்த பின் உன்னை என்னவென்று கேட்கத் தோனவில்லை இன்று உன்னவள் என்று ... * அருமையான வரிகள் தோழரே..... தொடர்ந்து எழுதவும்... 15-Nov-2014 12:23 am
நன்று 14-Nov-2014 9:30 pm
நன்று. சொப்ர 14-Nov-2014 7:58 pm
நீதான் என் என்னவன் என்று சொல்லுகிறேன். சூப்பர் ! 14-Nov-2014 7:20 pm
தென்றல் தாரகை - கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Feb-2015 4:51 pm

எழிலானவன் இதமானவன்

அவன் கால் பதிக்கும் இடங்களில்
சருகான இலைகளும் மலராகி மணம் வீசும் .

மூச்சிக் காற்றின் முன்னால் புயலும் தென்றலாய் வருடிவிடும்.

விழிப்பார்வையின் வெப்பத்தை நோக்கிட முடியாமல் ஆதவனும் சற்றே விலகி செல்வான் .

புருவம் உயர்த்துகையில் பூகம்பமோ என்று புரியாது விழிப்பாள் பூமாதேவி .

இதழ் அசைவை இசையென நினைத்து வண்ண மயிலின் நாட்டியத்திற்கு
வாயசைக்கும் குயில்கள் .

அவன் வார்த்தைகளின் முன்னால்
தான் வர்ணித்த அத்தனை கவிதைகளும் தோற்றுவிட்டதை எண்ணி தூக்கிட்டுக்கொண்டு இருப்பான் கம்பன் .

காவியங்கள் எல்லாம் வெறுமையாகி
கைகட்டி வாய்ப்பொத்தி காத்திருக்கும் அவன் புகழை

மேலும்

நன்றி நன்றிகள் . 31-Oct-2015 5:50 am
நன்றி நன்றிகள் . 31-Oct-2015 5:47 am
நன்றி நன்றிகள் . 31-Oct-2015 5:45 am
நல்ல சிந்தனை தோழி .....அருமையான வரிகள் ..... 29-Apr-2015 2:52 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (13)

தீனா

தீனா

சென்னை
பிரியா

பிரியா

பெங்களூரு
C. SHANTHI

C. SHANTHI

CHENNAI

இவர் பின்தொடர்பவர்கள் (13)

C. SHANTHI

C. SHANTHI

CHENNAI
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
கார்த்திகா

கார்த்திகா

தமிழ்நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (14)

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே