கலையானவளே

உன் இதழில் சுவையாக
தேனீக்களும் தீக்குளிக்குதே !
நீ பழரசம் பருகியதே
என்னுள் பரவசமூட்ட...
நீ பல ரசம் செய்து
ஏன் சில்மிஷம் செய்கிறாய் ?!
பட்டுடுத்தி நீ வந்தபோது
கொட்டடித்து என் மனம் குதிக்க ...
கண்ணாடியும் கொஞ்சம் வெட்கப்பட்டு
உன் பின்னாடி ஒளிந்து கொண்டது !!