ரகசியம் 10

அன்பு கோவிலுக்குச் சென்றுவிட்டு அங்கு விசாரிக்காமல் வெளியேறினான். சிறிது தூரம் நடக்க ஆரம்பித்தான். நடக்கும் தொலைவிலேயே அங்கு ஒரு நண்பனை பார்த்தா சின்ன வயதில் அவனுக்கு இங்கு வரும் சமயம் எல்லாம் அவனுடன் ஊரைச்சுற்றி பார்ப்பான் பம்புகளில் சென்று குளிப்பான். அவன் பெயர் குமார்...
குமார் எப்படி இருக்க என்று அன்பு கேட்க நான் நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்க? எப்ப வந்த ?என குமார் கேட்டுக்கொண்டே இருவரும் கை கொடுத்துக் கொண்டனர்.

நான் வந்து இரண்டு நாள் ஆகுது.சரி வா என் வீட்டிற்கு போகலாம்..என் குமார் அன்பை அழைத்து கொண்டு சென்றான்..அவன் வீட்டில்
அன்பிற்கு பிடித்த நாய்க்குட்டி இருக்கு அதை பார்க்காமல் அவன் அவ்வூரை விட்டு செல்லமாட்டார்கள்..

வீட்டிற்கு வந்தனர் இருவரும்.அந்த நாய்குட்டி அன்பிடம் ஓடி வந்து தன் நாக்கால் நக்கியது... அவனும் அந்த குட்டியுடன் விளையாட்டு காட்டில் விளையாடி கொண்டிருந்தான்.. சிறிது நேரம் போனது.குமார் இந்த ஊரில் வந்த இரண்டு நாட்களில் ஏதோ வித்தியாசமான நடவடிக்கைகள் பார்த்தேன் டா..
அமாவாசை அன்று வெளியே யாரும் வர கூடாது என தம்பட்டம் அடிக்கின்றனர்..
அது மட்டும் இல்லாமல் அன்று இரவு என்ன நடந்தது தெரியுமா?????என் அன்பு சொல்லி கொண்டே வர குமார் நிறுத்து....
இங்க பாரு டா இந்த ஊர்ல என்ன நடக்குதுன்னு
ஆராய்ச்சி செய்ய ஆரம்பிக்காதே...

நிறுத்துடா இந்த ஊரில் என்ன நடந்தது நடக்கிறது என ஆராய்ச்சிசெய்தால் எல்லோருக்கும்
ஆபத்து தான் வந்து சேரும்...
என சொல்ல விடாமல்
என்ன நடந்தது எனவும் கேட்காது வாயை அடைத்தான் குமார்....

எனக்கு வேலை இருக்கு அப்புறம் பார்ப்போம் என கூறினான்... அவனும் சரி என்று எதுவும் பேசாது பெரியப்பா வீட்டிற்கு திரும்பினான்...

என்ன நம் குழப்பங்கள் அதிகத்து கொண்டே போகிறதே? இவ்வூரில் அப்படி என்ன ரகசியம் இருக்கும்..

எழுதியவர் : உமா மணி படைப்பு (30-Sep-18, 9:44 am)
சேர்த்தது : உமா
பார்வை : 180

மேலே