மணல் பதுக்கல்

யாருய்யா வீரய்யன்? வெளில வா.

நாந்தானுங்க அய்யா வீரய்யன்.

உன் வீட்டில பத்து கிலோ மணலைப் பதிக்கு வச்சிருக்கறதா தகவல் வந்தது. அதான் சோதனை போடலாம்னு வந்தோம்.

அய்யா யாரோ என்னப் பழிவாங்க தப்பான தகவலைக் குடுத்திருக்காங்க.

சரியான தகவல்படி நாங்க உம் வீடு, மாட்டுக் கொட்டாய், ஆட்டுப்பட்டி தோட்டம் தொரவு எல்லாத்தையும் சோதனை போட வந்திருக்கறோம். மணல் தட்டுப்பாடு இருக்கற நேரத்தில ஒரே ஒரு கிலோ மணலைப் பதுக்கினாக்கூட அது சட்டப்படி குற்றம். இதோ எங்களுக்கு வாட்ஸ்அப்பில வந்த படத்தைப் பாரு. மணலை சாக்கு பையு போட்டு மூடி வச்சிருக்கற?

அய்யா போன வருசம் இந்த வீட்டைக் கட்டினேன்.கொஞ்சம் மணலு மிச்சமாகிருச்சுங்க. அதத்தான் சாக்குப் பை போட்டு மூடி வச்சிருக்கிறேனுங்க.

யோவ் கதிரேசா ஒரு சிமிட்டிச் சாக்குல அள்ளி நம்ம வண்டில வையுயா. வீரய்யா ஏறு வண்டில. பதுக்கல் பதுக்கல் தான். உன்ன எங்க எடத்துக்குக் கொண்டு போயி கவனிக்கற விதத்தில கவனிச்சா இன்னும் வேறெங்கலாம் மணலைப் பதுக்கி வச்சிருக்கிறங்கற உண்மையைக் கக்கப்போற. ஏறு வண்டில.

????????

எழுதியவர் : மலர் (30-Sep-18, 5:35 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 83

சிறந்த நகைச்சுவைகள்

மேலே