ஆதலினால் வார்த்தையில் வடித்தேன்
உன்னை ஓவியமாய்
எழுதி வைத்தேன் இதயத்தில்
விழிகளை இரு தாமரையாய்
மூடித்திறக்கும் அழகை அந்திவானமாய்
புன்னகையை மல்லிகைச் சரமாய்
உள்ளத்தின் உணர்வுகளை
எப்படி எழுதுவேன் ஓவியத்தில்
ஆதலினால்
வார்த்தையில் வடித்தேன் கவிதையாய்
இல்லை
காதலாய்......