ஆச்சரியம்
சிறகடிக்கும்
இமையிரண்டில்
சிறைப்பட்ட
கோலிகுண்டாய்
கருவிழிகள்
சுழல
கண்ணிரண்டும்
சிரிக்குமோ
ஆச்சரியம்
கலந்த
வினா
கொண்டேன்
முதன்முதலாய்!
கண்ணை
விட்டு
நீ அகல
உன் விழிகள்
கொண்டு
எனக்குள்
நீ
பதித்த
முத்திரை
அகல
மறுத்ததே
இப்படியுமா
என்ற
இரண்டாவது
ஆச்சரியம்
என்னுள்ளே
தொடராக
ஆச்சர்யங்கள்
உன்
வடிவில்
என்னை
தொடர
இன்று என்
சிரிப்பு
தொடர்கின்றது
வெட்டவெளியை
வெறித்தபடி
ஆனாலும்
ஆச்சர்யம்
மட்டும்
எனைவிட்டு
விலகுவதாய்
இல்லை
போவோர்
வருவோர்
என்னை
பார்த்து
செல்கின்றனர்
ஆச்சர்யத்துடனே..,