நாளை உனக்கானது

கேட்பாரற்று கிடந்தது
அந்தத் தட்டு
பாட்டியின் நினைவுகளோடு
அவள் இருந்தது போலவே

மடியில் அமர்த்தி
சின்னஞ்சிறு கதைகள் கூறி
சிந்திக்க வைத்து மகிழ்ந்தவள்
இல்லாமல் போனாள்
இவ்வுலகத்தை விட்டு

ஓடிச் சென்று
தட்டை எடுத்து அணைத்தவன்
தாயிடம் சொன்னான்
நாளை உனக்கானது என்று

எழுதியவர் : உமாபாரதி (11-Dec-18, 11:59 am)
பார்வை : 294

மேலே