பீலி

பீலி
====================================ருத்ரா

மயிற்பீலியை வைத்து
கவிதை எழுதினேன்
அவளுக்கு.
பெண் மயில் பிரியவிட்டு
எவன் அந்த ஆண் மயிலை
கொன்றானோ?
அது பீலியாய் என் கையில்.
அதன் பிரிவு தாகம்
கண்ணீராகி
காகிதம் நனைத்தது.
இதுவே போதும்.
என்ன நான் அவளுக்கு
எழுதுவது?

=======================================

எழுதியவர் : ருத்ரா இ பரமசிவன். (20-Feb-19, 10:39 am)
சேர்த்தது : ருத்ரா
பார்வை : 79

மேலே