புயல் பறவைகள்

புயல் பறவைகள்

நீங்கள் வீடு கட்டும் முன்பே
நாங்கள்
கூடு கட்டி வாழ்ந்தோம்.

சுழற்றி அடித்த
நூறு மையில்
சூறாவளி
சுப்புவின் ஓலைக் குடிசையுடன்
எங்கள் கூட்டையும் தான்
துவம்சம் செய்தது.
தண்ணீரின்றி
பட்ட காலம் போய்
காற்றால் கண்ணீரில்
படுகின்றோம்.
மரமிருந்தால்
வாழாலாம்
மரம் வெட்டியும்
வாழலாம் .
மரம் வீழ்ந்தால்
வாழமுடியுமா?


எல்லோருக்கும் வீடு
என்கிற திட்டத்தில்
எல்லோருக்கும் கூடு
என்றும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

யார் தருவார்
நிவாரணம்
இழந்த வீட்டிற்கா
இல்லை
இழந்த மரத்திற்கா
மரத்திற்கு
ஆயிரம் ஆயிரம்
உருபாயா மே
மரத்திற்கு
பணம் பெருகிறவர்கள்
பணம் வைத்து
மரம் வைத்து
பிறகு
வளம் வைத்து
பிழைப்பார்கள்.
எங்களுக்கும்
இப்பொழுதே தேவை
ஒரு வளர்ந்த மரம்
ஒரு தளர்ந்த மரம்
ஒரு கூடு
ஒன்றும்
கல் மண்ணால்
கட்டுவதல்ல
கிடைக்காத
மணல்கூட தேவையில்லை.
நாங்கள் கலப்படாமல்லா
வீடு கட்டுபவர்கள்
மரம் வேண்டும்
மரக்கிளை வேண்டும்
இலை வேண்டும்
நாறு வேண்டும்.
பிறகு
எங்கள் கூடு வளரும் .

எழுதியவர் : இராமானுஜம் மேகநாதன் (5-Mar-19, 5:25 pm)
Tanglish : puyal paravaikal
பார்வை : 191

மேலே