வீட்டுமல்லியும் காட்டு மல்லியும்

யாப்பிய கவிதை வீட்டு கொடியின்
மேல் பரவிய வாசமிகு கொடிமல்லிப்பூ
கர்ணபரம்பரையாய் பாடி வரும் பள்ளுப்பாடல்கள்
காட்டில் தரையில் கொடியின்றி பரவி
சுகந்தம் பரப்பும் காட்டுமல்லிப்பூ
வீட்டு கொடிமல்லிச் செடிக்கு தோட்டாக்காரன்
உண்டு கோடி அழகாய்ப்படற பூப்பூக்க
காட்டுமல்லிச்செடிக்கு இயற்கையே எல்லாம்
பாரிப்பொன்று வள்ளல் வந்தால் செடி
வீட்டுச்செடியையும் மிஞ்சி பூக்கும் வசம் தந்து

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (29-May-19, 5:27 pm)
பார்வை : 118

மேலே