தமிழ்

வீடுதோறும் ஓர் மரம் நடவேண்டும்
என்று சொல்பவர்கள் கூடவே
ஒவ்வோர் தமிழர் இல்லம் தோறும்
ஒருவராவது நல்ல தமிழில் பேசி
படித்து வளம்பெற எழுதிடவும் வேண்டும்
என்று இன்னும் கூறாத தவறிநிற்பதேன்
எங்கள் தமிழ் தொன்மொழி என்று மட்டும்
கூறி என்ன பயன் இம்மொழி நம்மொழி
தழைத்தோங்கி வளர்ந்திட வேண்டாமா

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (29-May-19, 7:03 pm)
Tanglish : thamizh
பார்வை : 443

மேலே