திருத்த இயலாது

வயிற்றுப் பிழைப்புக்கு
வழிகாட்டும் பெற்றோர்
வளரும் பிள்ளைகளுக்கு
வாழ்வியல் சிந்தனையை
விவரிக்காமல் போனதும்

நாட்டு பற்றையும்
நாட்டின் பண்பாட்டையும்
முதன்மைப் பாடங்களாக
மாணவர்களுக்குக் கற்று தராமல்,
அவர்களை ஆசிரியர்கள்
இயந்திரமயமாக்கியதும்

இயந்திரமயமானதால்
அன்பு,பாசம், மனிதநேயம்
அத்தனையும் தொலைந்துவிட
மாணவன், தான் மட்டும் வாழ
வழி தேடுவது வாடிக்கை

பெற்றோரும், ஆசிரியரும்
பள்ளி மாணாக்கர்களை
15 வயதுக்குள் திருத்தாவிடில்
அவர்களை அரசாலோ, சட்டத்தாலோ
ஒருபோதும் திருத்த இயலாது.

எழுதியவர் : கோ. கணபதி. (9-Jun-19, 8:50 am)
சேர்த்தது : கோ.கணபதி
Tanglish : thirutha iyalaathu
பார்வை : 68

மேலே