மழையே

காடுகள் சிதைந்துபோக
___காலடி  மழைநீரும்
கடந்து போயே
__கடலிலே தற்கொலை
மழையினால் தவிழ்ந்த
___மகிழ்வையும் இழந்தே
மனதையும் வெறுப்பாக்கி
___மாய்கிறான் உழவன்
விழும் மழைநீரையே
__விழாமல் தடுத்தாலே
விளைந்து வந்துடுமே
__விலையில்லா மகிழ்வும்
  வாழ்வோடு   ஒட்டியிருக்கும்
__கார்மேக மழையே
நீ வந்தாலே
___மனவளம் கூடுமே
உழவனின் வெற்றிக்கும்
___அடையாளம் தருவாய்
தலைக்கனம் கொண்ட
__மின்னிடும் விண்மீன் 
மகிழ்ச்சி தருவது
உன்னுடைய உறவே
அகிலன் ராஜா

எழுதியவர் : Akilan raja (30-Aug-19, 6:27 pm)
பார்வை : 192

மேலே