கறினா

ஏன்டப்பா கண்ணுத்து, உம் பொண்ணுப் பேரு என்னடா?
@@@@@
பாட்டி, இன்னொரு தடவை என்ன கண்ணுப்பத்துன்னு கூப்பிட்டா எனக்குப் பொல்லாத கோவம் வரும்.
@@@@@
ஏன்டா கோவம் வரும். :கணபதி'ங்கற உன்
தாத்தா பேரை உனக்கு வச்சோம். நீ வடக்க போயி ரண்டு வருசம் வேலை பாத்துட்டு நம்ம நகரத்துக்கு திரும்பி வந்ததும் நீதான்டா "என்னை யாரும் 'கணபதி'ன்னு கூப்பிடக்கூடாது. என்னைக் 'கண்ணுபத்து'ன்னுதான் கூப்பிடணும்"ன்னு சொன்ன.
@@@@@
கண்ணுபத்து இல்ல பாட்டி. 'கண்பத்'.
@@@@@
அதெல்லாம் என்னால சொல்ல முடியாது. எனக்கு நீ கண்ணுபத்துதான்டா பேரப் பையா. சரி. உம் பொண்ணுப் பேரு என்னடா?
@@@@
உம்.... அவ பேரு 'கரினா'.
@@@@@
கறினாவா. நீ தான் கறிவெறி பிடிச்சவன். கவிச்சை இல்லாம சோறு உந் தொண்டையில எறங்காது. 32 வயிசிவயே தொப்பை. பாக்கறவங்க உம் பேரணுக்கு எத்தனை மாசம். எப்ப பிரசவம்னு கேக்கறாங்க. பொண்ணும் ககறிவெறி பிடிச்சு அலையணும்றனா அவளுக்கு கறினான்னு பேரு வச்ச.
@@#@#
பாட்டி நான் உழைக்கிறதே சொகமா ருசியாச் சாப்பிடத்தான். இந்தத் தொப்பைக்கு கெடைக்கிற மரியாதையப் பத்தி உனக்கு என்ன தெரியும்?
@######
தின்னு சாமி தின்னு. உஞ் சம்பாதனை. உம் நல்லதுக்கு காலம் இல்லை.

எழுதியவர் : மலர் (21-Sep-19, 3:12 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 76

மேலே