நான் எழுதும் நான்👋

நீந்தி என்னில் நீளூம் காற்று
என் இதயத்தை நிமிர்த்தி போக
குளிர் மூச்சுக்கள் அலையாகிறது...

எண்ணக் கொசுக்கள் எல்லாம்
அமைதிக் கிண்ணத்தில்
அமர்ந்து தலையணை கேட்க்க...

கன்ன மேட்டில் ஏறிய நகைப்பு
துருதுருப்பாக சில நினைவுகளை
மனதில் தத்தெடுக்கிறது...

நானென்ற குளத்திற்கு
தாமரையாக அலங்கரித்த நாட்கள்
வாடாமல் இன்னும் வாசம் எரிகிறது...

இருளில் கூட்டம் கூடும்
நண்டுகள் போல
தனிமையின் காகிதத்தில்
அரைகுறை ஓவியங்கள் கூடுகிறது...

அதே நகைப்புடன்
மீண்டும் பிரசவமாகிறேன்...(இஷான்

எழுதியவர் : இஷான் (10-Feb-20, 10:26 pm)
பார்வை : 364

மேலே