யாரும் அறியாமல் கொடை

அன்னம் உண்ண அனுதினமும்

அல்லாடும் மாந்தரை கண்டால்

இதயம்

இளகி உதவ மனம் வருமே

இருந்தும் பையில் பணம்

இல்லையே வருந்தும் சில மனமே

கையை நீட்டி பொருள் வாங்கும்

இல்லாத தருணமும் இருந்தும்

கண்ணீர் துளிகள் உதிருமே

எவரும் அறியாமலே,

ஏன் இந்த ஏற்றம் இறக்கம்

வைத்தான் மனிதனுக்கிடையிலே

கையிரண்டுக்கும் தெரிய வேண்டாம்

உதவி என்பதை

இன்றோ விளம்பரங்கள் வீதியெங்கும்

புகைபடத்திலும்...

உதவும் எண்ணங்களை விதைத்திடு

வறியவரை விளம்பரத்தில் அகற்றிடு !

குடைக்கு விளம்பரம் தேவை

கொடைக்குமா?

எழுதியவர் : த பசுபதி (7-Apr-20, 10:33 pm)
சேர்த்தது : பசுபதி
பார்வை : 78

மேலே