எண்ணம்

என்னென்ன இருக்கிறது
நம்மிடம் இதுவரை எண்ணவில்லை
என்னென்ன இல்லை நம்மிடம் என நினைத்தவுடன் நீள்கிறது நீண்ட பட்டியல்
ஏன் இதுவரை நாம் எண்ணவில்லை என்று எண்ணினேன்
என்னென்ன இருக்கிறது என்றதும் குறுகும் நம் எண்ணம்
என்னென்ன இல்லை என்றதும் பட்டியலிட பரந்து விரிகிறது
இல்லாத ஒன்றை நினைத்து ஏங்குவது மனித இயல்பா? இருக்கும் ஒன்றிற்கு நன்றி சொல்ல மறப்பது மாபெரும் தவறா?
என எண்ணினேன்
விருப்பத்தை அதிகம் விரிவாக்கி அதில் சிக்கி விடுகிறது நம் மனம்
விருப்பவலையில் சிக்கித் தவிப்பது வேறு யாரோ அல்ல நாமே!
சிந்தித்துச் செயல்பட இறைவன் அனைவருக்கும் கொடுத்திருக்கும் மாபெரும் கொடை எண்ணம்
அதனை இதுவரை நாம் எண்ணாமல் இருந்திருந்தால் பரவாயில்லை
இனியாவது எண்ணுவோம்
அழகிய எண்ணத்திற்கு
அனுதினம் நன்றி சொல்லுவோம்.

#சரவிபி_ரோசிசந்திரா

எழுதியவர் : சரவிபி ரோசிசந்திரா (17-Aug-20, 8:33 pm)
Tanglish : ennm
பார்வை : 186

மேலே