தற் கொலை

உடைந்து போன கண்ணாடி துண்டுகளை ஒட்ட வைப்பதற்கு பிராயசித்தம் செய்துக்கொண்டிருந்தான் ஒரு சின்னஞ்சிறுவன்

முதலில் அரிசிசோறு கோந்து பின் கம் பெவிக்கால் பெவிஸ்டிக் அத்தனையும் ஒட்டவைத்தன
அவனது சிறுவிரல்களை மறுவிரல்களோடு..
உடைந்த கண்ணாடிகளை தொடவிடாமல் இருப்பதற்கு..

ஒன்றும் கூடாதததால் விரலை கடித்தபடி சிந்தனை செய்தான் நின்றபடி

முடிவில் மனம் வெதும்பிய சிறுவன், கண்களில் நீர்முட்ட அத்தனையையும் தூக்கியெறிந்தான்

விழுந்திட்ட இடத்தில் குமிழ் பரவ தண்ணீரில் தங்களை மூழ்கடித்துக்கொண்டு

தற்கொலை செய்துக்கொண்டன

உடைந்து போன கண்ணாடி துண்டுகள் ஒன்றொடொன்று...

எழுதியவர் : S.Ra (27-Aug-20, 9:28 pm)
சேர்த்தது : Ravichandran
பார்வை : 62

மேலே