தமிழ்மொழியாள்

தமிழ்மொழியாள்!


மின்னலதைப் போல்வந்தாள் ! என்முன்னே நின்றாள் !
முழுநிலவாய்த் தேயாமல் மனதில் நிறைந்தாள் !
கன்னியவள் கடைக்கண்ணைக் காட்டிவிட்டாள் – என்
காலமெலாம் இன்பம்தான்! கவலையில்லை !
விண்நிற்கும் கதிராக விளங்கு கின்றாள் ! – என்
வீதியெலாம் ஓளிவெள்ளம் வீசுகின்றாள்!
விண்மீன்கள் கூட்டத்தில் வெள்ளியவள் ! – என்
வாழ்க்கை எனும்பொழுதினிலே விடியலவள் !
கண்ணோடு என்நெஞ்சில் கருத்துமாகி
காலத்தால் அழியாத கவிதையானாள் !
தன்னோடு நிகரில்லாத் தமிழ்மொழியாள் ! – தனை
தந்துவிட்டால் நானென்றும் தலைமகனே!

எழுதியவர் : கவி இராசன் (4-Nov-20, 12:51 am)
சேர்த்தது : கவி இராசன்
பார்வை : 1442

மேலே