கருவறை

கருவறை.

ஒரு உயிரில் இன்னொரு உயிராக தஞ்சம்.
இருட்டு அறையில் தனி உயிராக
ரத்த குளத்தில் தினம் ஆனந்த நீச்சல்.
பத்து மாதம் மட்டுமே பிரத்தியேக அனுமதி.
வெளிச்சமில்லா அறையில்
நூறு மடங்கு ஆழ்கடல் அமைதி.
தொப்புள் கொடியில் உயர் வளர்க்க
அன்னையில் விரல்கள் ஆசையாக
அடி வயிரை தடவ
அளவில்லா அன்பை தினம் பெறுகிறேன்.
ஆகாயமும் இல்லை.
பூமியும் இல்லை.
எனக்கு தெரிவதெல்லாம்
நான் வசிக்கும் அதிசய அபூர்வ கருவறை தான்.
தனி உயிராக தாயின்
தயவால் முன்நூறு நாட்கள் கடும் தவம்.
தியாணம்.
தனி உலகம்.
தனித்துமான உலகம்.
மெய்யான மய்ய உலகம்.
மாசற்ற உலகம்.
சூதுவாது அறியா உண்மையான உலகம்
ஒப்பற்ற தாயின் அன்பால் கட்டப்பட்ட
அற்புத உலகம்.
மண்ணில் விழ மனம் இல்லை.
மறுதலிக்கவும் முடியவில்லை.
சுமைதாங்கியின் சுகமான பிரசவ வலியை
பொறுக்க முடியவில்லை.
ஆதார சுருதியின் அழுகுரல் ஆழ் மனதை அதிர வைக்க
இதோ வந்து விழுந்தேன் பூமியில்
உயிருடன்
ரத்தமும் சதையாக.
தவழ்ந்தேன் என் அன்னையின் கைகளில்.
உச்சு முகர்ந்த
உயிர் தந்த தெய்வம்
ஆசை தீர பாலூட்ட
பசியாறிய நான்
பன்புடன்
வாழ்க்கை பிரயாணத்தை
ஆரம்பித்தேன் என்
கல்லறையை நோக்கி.
- பாலு.

எழுதியவர் : பாலு (26-Mar-21, 9:07 pm)
சேர்த்தது : balu
Tanglish : karuvarai
பார்வை : 81

மேலே