சுதந்திரம் போற்றுவோம்
சுதந்திரம் போற்றுவோம்
*****
மாந்தருக்குள் பேதங்கள் சிறிதளவும் இல்லாது
மந்திமனம் கொள்ளாது சுத்தமனம் அதுபற்றி
காந்தமென எல்லோரும் ஈர்ப்போடு ஒன்றாக
பாந்தமாய் வாழ்வோம் அருமைத் தோழமையே
உலகத்தில் நம்நாடு சிறப்பாய் தேர்ச்சியுற
கொலையும் கொள்ளையு மில்லாத நிலையில்
நல்லறம் பேணி சீரான நோக்குடனே
தலைசிறந்து வாழ்வோம் தலைமுறை தலைமுறையாய் !
( இலக்கணம் சாராத இயல்பு வரிகளில்)