சீனனைப் பார்
சீனனைப் பார்
சீனனைப் பார்த்தாயோ !
சிறியவன் உருவத்தில்,
சிந்தனையால் உழைப்பால்,
சிதறியிருந்த நாடுதனை,
சீராக்கி சிறப்பாக்கி விட்டான் அவன்.
அங்கே !
மதமில்லை ஜாதி இல்லை,
மறு கேள்விக்கோ இடமில்லை,
திட்டம் ஒன்று தீட்டி விடின்,
திடமாக முடித்து வைப்பார்.
இங்கே !
மதமுண்டு ஜாதி உண்டு,
மதத்திற்குள் பல வீடுண்டு,
ஜாதிக்குள் பல கோடுண்டு,
ஜனநாயகம் என்று சொல்லி,
கேள்விக்கு மேல் கேள்வி,
திட்டம் ஒன்று தீட்டிவிடின்,
திடமாகவே கொள்ளையடிப்பார்,
மக்களோ நடுத்தெருவில்,
மாற்று வழி தெரியாமல்,
மாயோனை தேடுகின்றார்.
ஆக்கம்
சண்டியூர் பாலன்.