சத்தம்

காற்றும்
கதவும்
சலனமின்றி
தொட்டுக்
கொண்டிருந்தன
அந்நள்ளிரவில்

வெளிச்சத்தின்
குறுக்கீடு
தான் அபசகுணமாக

விடிந்து திறந்த
கதவுக்கு
அப்பால்

காத்திருந்த
ஒலிகள் யாவும்

வழிய
இறைஞ்சுகின்றன
என் அறையில்...

எழுதியவர் : S. Ra (23-Sep-21, 12:38 pm)
சேர்த்தது : Ravichandran
Tanglish : sattham
பார்வை : 97

மேலே