காதல் கண்டேன்
ஆண்: "அழகை கண்டேனே!
ஆசை கொண்டேனே!
கவிதை கண்டேனே!
காதல் கொண்டேனே!
"அழகை கண்டேனே!
ஆசை கொண்டேனே!
@@@@
1. பெண்: உருவை கண்டேனே,
நான் உறக்கம்
கொன்றேனே,
உறவை கண்டேனே
என் உயிரை தந்தேனே ,
ஆண்: காதல் இதுதானா?
கனவு நிஜம்தானா?
களவும் சுகம் தானா?
நீ என் வசம் தானா?
@@@@
பெண் : பார்வை கண்டேனே!
பரிவு கொண்டேனே,
பருவம் கண்டேனே !
பாசம் கொண்டேனே,
பார்வை கண்டேனே!
பரிவு கொண்டேனே,
@@@@
2. ஆண்: இனிமை கண்டேனே,
நான் இன்பம்
கொண்டேனே,
தயக்கம் துறந்தேனே,
நான் தணிக்க
துணிந்தேனே,
பெண்: ஆசை நிஜம் தானா?
அன்பு நிலை தானா?
அளிக்க நீ தானா?
களிக்கும் நாள் தானா?
@@@@
ஆ,பெ : காதல் கொண்டோமே,
கனவு கண்டோமே,
சிறகை விரிப்போமே,
இணைந்து பறப்போமே." (1)
-------