என் வாழ்க்கை -sagi

ஓர் சில ஆண்களுக்கு...

உங்கள் கரம் கோர்த்து உங்களை நம்பியவளின் மீது அதீத அன்பும் அர்க்கரையும் காட்டவில்லை என்றாலும் பரவாயில்லை....

அவள் உணர்வுகளையும்
எண்ணங்களையும்
கொஞ்சம் மதிக்க
செய்யுங்கள்....

அவள் கடந்து வந்த
வாழ்க்கை எவ்வளவு வலியான
பாதையென்று அவள் மட்டுமே
அறிவாள்....

நிகழ் கால வாழ்க்கையும்
எதிர்கால வாழ்க்கையும்
அவள் தன் கணவனுக்கும்
பிள்ளைகளுக்குமே அர்ப்பணிக்கிறாள்....

உங்கள் எண்ணங்கள்,
சந்தோசம்,எதிர்பார்ப்புகள்
போலவே அவளுக்கும்
தனியே உண்டு.....


நேரம் இல்லையென்று
பேசமாலும், கொஞ்சமலும்
விட்டு விடாதீர்கள்....


ஓர் சிலர் இல்லை
பெரும்பாலும் ஆண்கள்
கையப்பேசியிலும், இணையம்
வழி பெண்களிடமே பேச
விரும்புகிறார்கள்...


சில பெண்களே
உங்கள் கணவன் சரி
இல்லையென்று அடுத்தவள்
கணவனிடம் நேரம்
கொண்டாதீர்கள்....

துரோகிகள் தான்
சில ஆண்கள்...

நல்லவனை போலவே
நடிப்பார்கள்...

உங்களுக்கு அடிமை
இல்லை மனைவிகள்...


கண்ணீரிலும் கவலைகளிலும்
பெண்கள் வாழ்க்கை செல்கிறது...
M. Sagi
உன் தாயின்
வளர்ப்பு சரி எனில்
உன் மனைவியின்
எண்ணங்களை உணர்வுகளை
அவள் சொல்லாமலே புரிந்து
கொள்வதிலே உள்ளது.....

உணர முடியவில்லை
எனில் அவளை வார்த்தைகளால்
கொல்லாதீர்கள்.....
சங்கீதா

எழுதியவர் : Sagi (9-Jan-22, 10:32 pm)
சேர்த்தது : சங்கீதா
பார்வை : 829

மேலே