நிசப்தம்

அந்த சில்வர்
தவளையை
அவர்கள்
மௌனத்தாலே
செய்திருந்தார்கள்

தண்ணீர் ஊற்றும்
போது சலனமில்லாத
அதன் நிலை
மனைவியின் மனதை
கனத்தது


கைதவறிய போதும்
சத்தம் எழாத
அதன் விநோத
நிலைக்கண்டு
என் பிள்ளைகளும்
புலம்பினர்

வீடு மாற்றகையில்
தொலைந்துபோன
அதன் நினைவில்
அன்றிரவு
அனைவரும்
வருந்தினோம்

பின்னொரு நாள்
புதிதாக ஒரு தவளையை
என் மனைவி வாங்கி
வந்தாள்

கைதவறியது
விழுந்த போது
எழுந்த சத்தத்தில்
பிள்ளைகளும்
விழித்துக் கொண்டனர்

நாங்கள் ஒருவரையொருவர்
மௌனமாக
பார்த்துக் கொண்டோம்

எழுதியவர் : S. Ra (6-Mar-22, 7:18 pm)
சேர்த்தது : Ravichandran
Tanglish : nisaptham
பார்வை : 84

மேலே